Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்!

படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்!
, திங்கள், 25 ஜூலை 2022 (14:45 IST)
மலையாள நடிகரான மின்னல் முரளி படப்பிடிப்பு தளத்தில் புகுந்து சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் மாரி 2 திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த மின்னல் முரளி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதையடுத்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் 2493 FD.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் முகமூடி அணிந்து நுழைந்த சிலர் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் படத்தின் மேக்கப் மேன் மிதுன் ஜித் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அந்த மர்மநபர்களைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும் எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டின் அடுத்த தோல்விப் படம் ரன்பீர் கபூரின் ‘ஷம்ஷேரா’?