Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் சர்ச்சை காட்சிகள்… மும்பையில் வழக்கு தொடர்ந்த நபர்!

Advertiesment
நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் சர்ச்சை காட்சிகள்… மும்பையில் வழக்கு தொடர்ந்த நபர்!

vinoth

, திங்கள், 8 ஜனவரி 2024 (10:50 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் சமீபத்தைய ரிலீஸாக அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களே வந்தன. முதல் நாளில் இந்த படம் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அந்த படம் திரையரங்கு மூலமாக சுமார் 80 லட்சம் மட்டுமே தயாரிப்பாளர் ஷேராக கலெக்ட் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சமீபத்தில் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் ஜெய் நயன்தாராவிடம் “ராமர் கூட அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்” என்று பேசுவது போல இருக்கும். மேலும் ஒரு அர்ச்சகரின் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த காட்சிகளைக் குறிப்பிட்டு இந்த மதத்தில் இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா பிரமுகர் ரமேஷ் சோலான்கி என்பவர் மும்பையில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்‌ஷன் இருக்கி.. ரொமான்ஸ் இருக்கி… செண்ட்டிமெண்ட் இருக்கி… மாஸ் மசாலாவா குண்டூர் காரம் டிரைலர் ரிலீஸ்!