Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிரத்னம் படங்களை மட்டுமே குறி வைக்கும் அட்லி: அடுத்தது நாயகனா?

மணிரத்னம் படங்களை மட்டுமே குறி வைக்கும் அட்லி: அடுத்தது நாயகனா?
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:32 IST)
இயக்குனர் அட்லி இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றாலும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து கோலிவுட் திரையுலகில் இருந்து வருவது உண்டு. அவர் இயக்கிய ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய அனைத்து திரைப்படங்களும் இதற்கு முன்னர் வெளியான திரைப்படங்களின் காப்பி என்று கூறப்பட்டது
 
குறிப்பாக ராஜா ராணி திரைப்படம் மௌனராகம் திரைப்படத்தின் காப்பி என்றும், தெறி திரைப்படம் சத்ரியன் திரைப் படத்தின் காப்பி என்றும், மெர்சல் திரைப்படம் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் காப்பி என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்தப் படம் நாயகன் திரைப்படத்தின் காப்பி என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அட்லீ ஒரு கதை கூறியதாகவும் இந்த கதை தான் நாயகன் படத்தின் அப்பட்டமான காப்பி என்று தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
குறிப்பாக மணிரத்தினம் படங்களையே குறிவைத்து அட்லி காப்பி அடிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை தவிர்த்து அட்லி சொந்தமாக ஒரு கதையை விரைவில் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் வெளியிட்ட சமையல் வீடியோ…செம வைரல்…