Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்தடுத்து பார்ட் 2 வில் கவனம் செலுத்தும் மிஷ்கின்!

அடுத்தடுத்து பார்ட் 2 வில் கவனம் செலுத்தும் மிஷ்கின்!
, வியாழன், 18 நவம்பர் 2021 (17:33 IST)
மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார். இந்த படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய ஹிட் படமான அஞ்சாதே படத்தின் பார்ட் 2 வையும் எடுக்க உள்ளாராம். இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை அஞ்சாதே படத்தின் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கோடு சேர்ந்து மிஷ்கின் மற்றும் அருண் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து தயாரிக்க உள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா படத்தில் சிறுத்தை சிவாவுக்கு சம்பளம் எவ்வளவு? தர்மசங்கடமான நிலைமை!