Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன் சம்பளமே தனக்கு வினையானதா? விரக்தியில் ஏ ஆர் முருகதாஸ்!

தன் சம்பளமே தனக்கு வினையானதா? விரக்தியில் ஏ ஆர் முருகதாஸ்!
, புதன், 23 ஜூன் 2021 (12:20 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்த படத்தை இயக்காமல் இருப்பதற்கு அவரின் சம்பளமே முதல் காரணம் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.

கடைசியாக அவர் இயக்கிய ஸ்பைடர் , சர்கார் மற்றும் தர்பார் ஆகிய படங்கள் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் உள்ள சிக்கலாக அவரின் சம்பளமே மாறியுள்ளதாம். தர்பார் படத்துக்கு முருகதாஸ் 33 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அந்த படத்தின் தோல்விக்கு இவரின் சம்பளமே முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. இவ்வளவு சம்பளம் ஒரு இயக்குனர் கொடுத்து அவரை வைத்து படம் எடுத்து பிஸ்னஸ் பண்ண முடியாது என்பதால் பலரும் அவரை தவிர்க்கிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர்'ஐ முந்திய ‘பீஸ்ட்’: இந்திய அளவில் அதிக லைக்ஸ்கள் பெற்று சாதனை!