Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Advertiesment
சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்…  மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

vinoth

, ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (09:39 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் நடிக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது அந்த படத்தின் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் முருகதாஸ்.

சல்மான் கான் படம் மார்ச் மாதத்தில் ரிலீஸாக உள்ளதால் மும்பையில் முகாமிட்டு அந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்தபின்னர்தான் இனிமேல் சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?