சில ஆண்டுகள் முன்னர் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.
இதையடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க, இயக்குனராக சுந்தர் சி ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள சுந்தர் சி “இந்த படத்தை முதலில் சிறிய படமாகதான் உருவாக்க ஆசைப்பட்டோம். ஆனால் கதையை எழுதும் போது அது பெரிய படமாக உருவாகிவிட்டது. என் கேரியரில் இப்படி ஒரு படத்தை இயக்குவேன் என நான் நினைக்கவில்லை. இந்திய அளவில் மிகப்பெரிய சாமி படமாக மூக்குத்தி அம்மன் 2 தான் இருக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.