Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட்டு நாட்டு பாடல் என்னுடைய சிறந்த இசையில்லை… MM கீரவாணி தடாலடி!

நாட்டு நாட்டு பாடல் என்னுடைய சிறந்த இசையில்லை… MM கீரவாணி தடாலடி!

vinoth

, வியாழன், 11 ஜூலை 2024 (11:36 IST)
பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய திரைப்பட பாடலாகும்.  இந்நிலையில் இன்று நடந்த ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் விருதை வென்றுள்ளது.

இந்த விருதை கீரவாணி பெற்றதின் மூலம்  14 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மானுக்குப் பிறகு இந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கர் மேடையில் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கீரவாணி ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த இசையில்லை எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் “பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து நான் அமைத்த இசையை விட ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த இசையில்லை. தாமதமாகவோ முன்பாகவோ ஒரு பாடலுக்கான அங்கிகாரம் கிடைத்துள்ளது. உங்களுக்கான அங்கீகாரம் ஏதோ ஒரு வகையில் வந்து சேரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கும்போதும் இதுபோன்ற கருத்துகளே எழுந்தன. ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த ரோஜா, பம்பாய் ஆகிய படங்களை ஒப்பிடும்போது ஜெய்ஹோ பாடல் சிறப்பான பாடல் இல்லை என சொல்லப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னிந்திய நடிகர்கள் யாரும் போதை பொருள் விளம்பரங்களில் நடிப்பதில்லை- சித்தார்த் பெருமிதம்!