Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா படத்தில் இருந்து வெளியேறினாரா உறியடி விஜயகுமார்?... பின்னணி என்ன?

சூர்யா படத்தில் இருந்து வெளியேறினாரா உறியடி விஜயகுமார்?... பின்னணி என்ன?

vinoth

, வியாழன், 11 ஜூலை 2024 (07:50 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் ஜோஜு ஜார்ஜ், நவீன் சந்திரா, டாணாக்காரன் தமிழ் மற்றும் நாராயணன் ஆகியோரும் நடிக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜின் மற்ற படங்களைப் போலவே இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் கதைதான் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது ஒரு பீரியட் படமாக உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் உறியடி விஜயகுமார் வெளியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை படத்துக்காக 8 நாட்கள் நடித்த விஜயகுமாருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கும் இடையே கருத்து வேறுபாட்டால்தான் அவர் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் ஸ்டைலில் இந்தியன் 2…. இடைவேளைக்கு முன்பாகதான் கமல் வருவாரா?