Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜா இல்லாம அவரால் கதை எழுத முடியாது… இயக்குனர் பிரேம்குமார் பற்றி கார்த்தி!

Advertiesment
இளையராஜா இல்லாம அவரால் கதை எழுத முடியாது… இயக்குனர் பிரேம்குமார் பற்றி கார்த்தி!

vinoth

, புதன், 18 செப்டம்பர் 2024 (14:12 IST)
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றியும் இயக்குனர் பற்றியும் பேசியுள்ள நடிகர் கார்த்தி “பிரேம்குமாரால் இளையராஜா இல்லாமல் கதை எழுத முடியாதுன்னு நெனைக்குறேன். இந்த படத்திலும் ஒரு முக்கியமான இடத்துல ஒரு இளையராஜா சார் பாடல் வருது. இந்த படம் நம்மள மாதிரி 30, 40 வயது ஆட்களுக்குப் பிடிக்கும், 20 வயசுப் பசங்களுக்கு பிடிக்குமா எனக் கேட்டேன். அவர் சில பசங்களிடம் கதையைக் கொடுத்துள்ளார். அவர்கள் படித்துவிட்டு ‘நீங்க எல்லாம் ஜாலியா வாழ்ந்திருக்கீங்க’ எனக் கூறினார்களாம்.’ எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘மானமும் அறிவும்தான் மனுஷனுக்கு அழகு’… எப்படி இருக்கு விமலின் ‘சார்’ டிரைலர்!