Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீரா மிதுனின் இன்ஸ்டா Account வாங்கி தலையில் துண்டு போட்ட பெண்!

மீரா மிதுனின் இன்ஸ்டா Account வாங்கி தலையில் துண்டு போட்ட பெண்!
, சனி, 26 ஜூன் 2021 (08:49 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். 
 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை இழிவாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
 
தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் தலையிட்டு பிரபமாகி வரும் மீரா மிதுன் கடனை சில நாட்களுக்கு முன்னர் தான் மிகுந்த மன அழுத்ததில் இருப்பதாக கூறி தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைதல பக்கங்களை யாரேனும் வாங்க விரும்பினால் வாங்கலாம் என கூறியிருந்தார். 
 
இதையடுத்து அவரது இன்ஸ்டா கணக்களை சமயல் யூடியூப் வைத்திருக்கும் பிரியா கிளிண்டன் என்ற பெண்  வாங்கினார். ஆனால், மீரா மிதுன் கணக்கை பலரும் Unfollow செய்துவிட்டனர். இதனால் விலை கொடுத்து வாங்கிய அந்த பெண் என்ன செய்வதென்றே புரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம். 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Clinton (@meeramitun)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் & கார்த்திக் நரேன் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு அப்டேட்!