Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ணன் படத்தின் பிரம்மாண்ட க்ளைமேக்ஸை மாற்றுகிறாரா மாரி செல்வராஜ்?

கர்ணன் படத்தின் பிரம்மாண்ட க்ளைமேக்ஸை மாற்றுகிறாரா மாரி செல்வராஜ்?
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (18:03 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்ற மாரி செல்வராஜ் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ஒருசில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் அந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

லாக்டவுன் முடிந்ததும் படம்பிடிக்கவேண்டிய காட்சிகளில் முக்கியமானது கிளைமேக்ஸ் காட்சியாகும். இதற்காக பிரம்மாண்டமாக பல வீடுகள் கொண்ட செட் ஒன்று போடப்பட்டுள்ளது, கதைப்படி கிளைமேக்ஸில் அந்த குடிசைகள் அனைத்தும் கொளுத்தப்பட்டு 500 க்கும் மேற்பட்ட நடிகர்களைக் கொண்டு படமாக்க இயக்குனர் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் லாக்டவுனுக்கு பின்னர் ஷூட்டிங் ஆரம்பித்தாலும் அத்தனைப் பேரை வைத்து படம் பிடிக்க முடியாது என்பதால் அதற்கான மாற்று வழிகளை மாரி செல்வராஜ் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.  சூழ்நிலை சரியாகும் வரை காத்திருந்து எடுக்கலாம் என்றால் அதுவரை அமைக்கப்பட்ட செட்கள் நிலைத்து இருக்காது என்பதால் வேறு என்ன செய்யலாம் எனப் படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் படத்து ஹீரோயின் எல்லாம் என்ன புர்கா போட்டா நடிக்கிறாங்க –ரசிகருக்கு மீரா மிதுன் பதில்!