Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாரா மாரி செல்வராஜ்?

Advertiesment
வாழை

vinoth

, திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (14:27 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ‘வாழை’ இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தார்.

இந்த படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ரசிகர்களின் பாராட்டு வார்த்தைகளால் படத்துக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மூன்றாவது வாரத்திலும், கோட் ரிலீஸுக்குப் பின்னரும் கணிசமான தியேட்டர்களில் இந்த படம் ஓடிவருவதே இதன் வெற்றியை கோடிட்டு காட்டுகிறது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் ஓடிடியிலும் வெளியாகி வெற்றியை ஈட்டியது. இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள படம் தாமதம் ஆவதால் அதற்கிடையில் இந்த படத்தை இயக்கி முடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈகோ பார்க்காமல் வடிவேலுவை மனம்திறந்து பாராட்டிய ஷங்கர்!