Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீடு திரும்பினார் மனோரமா மகன்! தற்கொலை முயற்சி செய்தியை மறுக்கும் மகன்!

வீடு திரும்பினார் மனோரமா மகன்! தற்கொலை முயற்சி செய்தியை மறுக்கும் மகன்!
, ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (13:50 IST)
நடிகை மனோரமாவின் மகன் கடந்த 10 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான சிலர் விபரீதமான பல முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் நடிகை மனோரமாவின் மகன் பூபதி நீண்ட நாட்களாக மதுவுக்கு அடிமையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது கிடைக்காமல் விரக்தியடைந்த அவர் அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தெரிகிறது.

இதனால் ஆபத்தான நிலையில் ஆயிரம் விளக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பூபதி. கடந்த 10 நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் தற்போது குணமாகியுள்ளார். மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றார் என்பதை அவரது மகன் மறுத்துள்ளார். மதுவை நிறுத்தியதால் ஏற்பட்ட நடுக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டுவிட்டருக்கு பதிலாக இந்தியாவிலேயே ஒரு சமூக வலைத்தளம்: கங்கனா ரனாவத்