Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றடித்தால் காகமும் பறக்கும்.. காகிதமும் பறக்கும்.. கலைஞரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய மணிகண்டன்!

vinoth
புதன், 9 ஜூலை 2025 (08:37 IST)
தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கலைஞர், எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பல துறைகளில் செயல்பட்டு வந்த மணிகண்டனை கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம் என்றால் அது குட்னைட் படம்தான். அந்த படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்று அனைவரையும் கவர்ந்தது.

ஜெய்பீம், குட்னைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக உருவாகி வருகிறார் மணிகண்டன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் பா ரஞ்சித் தயாரிப்பில் ‘மக்கள் காவலன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் மணிகண்டன் பேசியது கவனமீர்த்துள்ளது. அதில் “early success is a scam, Great things take time என்று நான் படித்துள்ளேன். அதையே கலைஞர் அய்யா தன்னுடைய கவிதை ஒன்றில் வேறு விதமாக எழுதியுள்ளார். காற்றடித்தால் காகமும் பறக்கும். காகிதமும் பறக்கும். காற்று நிற்கும் வரை பொறு. அப்போது பறக்கத் தெரியாதது நின்றுவிடும் என்று எழுதியிருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்தது” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காற்றடித்தால் காகமும் பறக்கும்.. காகிதமும் பறக்கும்.. கலைஞரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய மணிகண்டன்!

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments