Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மணிரத்னம் எழுதிய பாடல்…. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மணிரத்னம் எழுதிய பாடல்…. வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:45 IST)
மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகளை இப்போது ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஒரு பாடலை இயக்குனர் மணிரத்னமே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமான மணிரத்னம் படங்களுக்கு வைரமுத்து பாடல்களை எழுதுவார். ஆனால் முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்துக்கு வேறு சிலர் பாடல்களை எழுதி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் 61 படத்தின் ஷூட்டிங் பற்றிய செம்ம தகவல்… !