Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் பின்னணி இசை பற்றி ரஹ்மான் தந்த அப்டேட்… வைரல் புகைப்படம்!

Advertiesment
மணிரத்னம்
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (13:54 IST)
ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணி இசை கோர்ப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை இப்போது டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். இதுவரை இதுவரை இல்லாத தொகையாக சுமார் 20 கோடி ரூபாய்க்கு இரண்டு பாகங்களின் அனைத்து மொழிப் பாடல்களின் உரிமையும் விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புக்காக வித்தியாசமான இசைக்கருவிகளை இசைக்கலைஞர்கள் வாசிக்கும் புகைப்படங்களை ரஹ்மான் தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகள் சூழ கலகலப்பான ’ஓ மை டாக்’… எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டிரைலர்!