கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடு – தவறி விழுந்த மேக் அப் மேன் மரணம்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:38 IST)
மலையாள சினிமா உலகின் முன்னணி ஒப்பனைக் கலைஞரான ஷபு புல்பள்ளி தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு மேக்கப் மேனாக இருப்பவர் ஷபு புல்பள்ளி. அவர் இப்போது நிவின் பாலிக்கு மேக்கப் மேனாகவும் மேனேஜராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்ட போது தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தில் நட்சத்த்திரங்களைக் கட்டுவதற்காக ஏறியுள்ளார். அப்போது தவறி விழுந்த அவர் நினைவிழந்தார். அதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு மலையாள முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமலுடன் கடைசி படம்.. சினிமாவில் இருந்து ஓய்வு பெற ரஜினி முடிவா?

இனிமேல் 8 மணி நேரம் தான் நடித்து கொடுப்பேன்.. மீதி நேரங்களில்..? ராஷ்மிகா மந்தனா..

எல்லாமே போலி.. நம்ப வேண்டாம்.. இயக்குனர் பா ரஞ்சித் எச்சரிக்கை..!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments