Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யை வச்சு 300 கோடி ரூபாய்ல படம் பண்ணி 500 கோடி ரூபாய் சம்பாதிக்குறது பெருசில்ல… இயக்குனர் சுசீந்திரன் கருத்து!

Advertiesment
விஜய்யை வச்சு 300 கோடி ரூபாய்ல படம் பண்ணி 500 கோடி ரூபாய் சம்பாதிக்குறது பெருசில்ல… இயக்குனர் சுசீந்திரன் கருத்து!

vinoth

, புதன், 12 பிப்ரவரி 2025 (09:39 IST)
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன். அடுத்தடுத்து அவர் இயக்கிய பல படங்கள் ஹிட்டாக முன்னணி இயக்குனர் ஆனார். இதனால் சிம்பு மற்றும் விக்ரம் போன்ற முன்னணி இயக்குனர்களை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் படத்தை திட்டமிட்ட படி இயக்கும் முடிக்கும் இயக்குனர்களில் சுசீந்தரனும் ஒருவர். கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட மூன்று படங்களை இயக்கி கோலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் தோல்விப் படங்களாக அமைந்ததால் அவருக்கு இப்போது இறங்குமுகமாக உள்ளது. இப்போது அவர் வள்ளிமயில் மற்றும் 2கே லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “விஜய்யை வைத்து 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படமெடுத்து 500 கோடி ரூபாய் வசூல் செய்வது பெரிய விஷயம் இல்லை. 5 கோடி ரூபாயில் படமெடுத்து 500 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும். அதுதான் பெரிய விஷயம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் அந்த பிரகாஷ்?… வைரலாகும் விடாமுயற்சி மீம்கள்.. பதிலளித்த மகிழ் திருமேனி!