Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா இங்கிலாந்து அரையிறுதிப் போட்டி வர்ணனையில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ்!

இந்தியா இங்கிலாந்து அரையிறுதிப் போட்டி வர்ணனையில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ்!
, வியாழன், 10 நவம்பர் 2022 (15:21 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் தமிழ் வர்ணனையில் கலந்துகொண்டார்.

கொரோனா குமார் திரைப்படம் தாமதமாகி வந்ததால் இயக்குனர்ப் கோகுல், RJ பாலாஜியை கதாநாயகனாக வைத்து ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சத்தமே இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக்கை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக நடத்தினர்.

அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு ஆர் ஜே பாலாஜியுடன் பங்கேற்றார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் பற்றிய தன்னுடைய மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் லோகேஷ் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்