Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 வருடங்களுக்கு பிறகு தொடங்கிய லிங்குசாமி படம்!

3 வருடங்களுக்கு பிறகு தொடங்கிய லிங்குசாமி படம்!
, புதன், 14 ஜூலை 2021 (09:55 IST)
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில் இப்போது லிங்குசாமி படங்களில் கதாநாயகனாக நடித்த மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மாதவன் அந்த வேடத்தில் நடிக்க வில்லை என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகர் ஆதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நேற்று இந்தபடத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதை தமிழ் தயாரிப்பாளரும் லிங்குசாமியின் தம்பியுமான போஸ் க்ளாப் அடித்து ஆரம்பித்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்ஸிஜன் சிலிண்டரோடு சிவன்… எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்புக் கேட்ட இயக்குனர்!