Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குநர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

இயக்குநர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
, திங்கள், 24 ஏப்ரல் 2023 (13:39 IST)
காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பிவிபி என்ற நிறுவனம் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு ஆறு மாத கால சிறை தண்டனை விதித்திருந்தது. 
 
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரிசென்னை ஹைகோர்ட்டில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 20% திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அளித்த நீதிபதிகள் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் விதிக்கப்பட்ட ஆறு மாத ஸ்ரீதண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுத்த வேஸ்ட்... தமிழில் படத்தில் நடிக்க ஏகப்பட்ட கண்டிஷன் போடும் ஜான்வி கபூர்!