Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது - கோடியில் ஒருவன் தயாரிப்பாளர் நம்பிக்கை!

எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது - கோடியில் ஒருவன் தயாரிப்பாளர் நம்பிக்கை!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (12:30 IST)
விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு

மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.
 
அந்த விழாவில் பட அனுபவங்களை குறித்து பகிர்ந்துகொண்ட தயாரிப்பாளர் டி .டி ராஜா பேசியவை,
 
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போதே ஊரடங்கு வந்தது. 6 மாதத்தில் முடிக்க வேண்டிய படம் 20 மாதங்கள் கடந்தது. OTT இல்  இப்படத்தை கொடுப்பதற்கு எங்களுக்கு அதிக விலையில் வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இப்படத்தின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது .தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஊடகத்துறையும் ,பத்திரிகை துறையும் தான் என கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு இந்த நம்பர்தான் வேணும்! அடம்பிடித்த என்.டி.ஆர்! – 17 லட்சம் செலவு!