Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

vinoth
வியாழன், 27 மார்ச் 2025 (11:02 IST)
கீர்த்தி சுரேஷ், மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது.

இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர்  பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் ‘பேபி ஜான்’ திரைப்படம் மூலமாக அவர் இந்தி சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் தன்னுடைய இரண்டாவது படத்தில் ஒப்பந்தம ஆகியுள்ளார் கீர்த்தி. ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 350 திரைகள்… மாஸ் காட்டிய மோகன்லாலின் எம்புரான்!

LIK படத்தின் ஒரு பாடலுக்கு 5 கோடி ரூபாயா?... தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments