Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்ட படத்துக்குப் பின் ரஜினியோடு ஏன் படம் நடக்கவில்லை.. கார்த்திக் சுப்பராஜ் பதில்!

vinoth
புதன், 16 ஏப்ரல் 2025 (15:03 IST)
தமிழ் சினிமாவில் குறும்பட அலை வீசிய போது அதிலிருந்து வந்து வெற்றி பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்பராஜ். அவர் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டாகி அவரை நம்பிக்கைக்குரிய இயக்குனராக காட்டின.

ஆனால் அதன் பின்னர் அவர் வழக்கமான கமர்சியல் பார்முலா கதைகளாக எடுக்க ஆரம்பித்தார். ரஜினிகாந்தை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கியதன் மூலம் முழுக்க முழுக்க கமர்ஷியல் பாதைக்கு சென்றார். தற்போது சூர்யாவை வைத்து ரெட்ரோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் பேட்ட படத்துக்குப் பிறகு சில முறை ரஜினியை சந்தித்து சில கதைகளை சொன்னதாகவும், ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.  மேலும் “நான் ரஜினி சாரின் தீவிர ரசிகனாக இருப்பதால் அவரை வைத்து அதிக படம் பண்ண வேண்டும் என்று பேராசை படுகிறேனோ என்று தோன்றியது. ஆனால் இப்போது அவரை சாதாரணமாக சந்தித்துப் பேசி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments