Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் கதையைதான் ஷங்கர் படமாக்குகிறார்… கார்த்திக் சுப்பராஜ் சொன்ன தகவல்!

என் கதையைதான் ஷங்கர் படமாக்குகிறார்… கார்த்திக் சுப்பராஜ் சொன்ன தகவல்!
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:00 IST)
இயக்குனர் ஷங்கர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகும் படத்தை இப்போது இயக்கி வருகிறார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கிவருகிறார். ராம்சரண் 15 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க, கியாரா அத்வானி, ஜெயராம், சுரேஷ் கோபி, ரஹ்மான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்பராஜ் ஷங்கரோடு இணைந்து எழுதியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு நேர்காணலில் ‘ராம்சரண் 15 படத்தின் கதை என்னுடையதுதான். அதற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்’ என்று கூறி சந்தேகங்களுக்கு பதிலளித்துள்ளார். ஷங்கர் முதல் முதலாக இன்னொருவரிடம் கதை வாங்கி படம் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா இசையில் ஆதி நடித்த கிளாப்… நேரடி ஓடிடி வெளியீடு!