Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவரைக் கொலை செய்யும் சிம்ரன் – அந்தாதூன் படத்தில் நவரச நாயகனாகவே தோன்றும் கார்த்திக்!

கணவரைக் கொலை செய்யும் சிம்ரன் – அந்தாதூன் படத்தில் நவரச நாயகனாகவே தோன்றும் கார்த்திக்!
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:46 IST)
அந்தாதூன் படத்தில் நடிகர் கார்த்திக் நடிகராகவே தோன்ற உள்ளாதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி உலகம் முழுவதும் கவனம் பெற்ற திரைப்படம் அந்தாதூன். ஒரு கொலையைப் பார்த்துவிடும் கண்பார்வை இல்லாதவனாக நடிக்கும் இசைக்கலைஞனின் பிரச்சனையே இந்த படம். இந்த  படத்தை இப்போது தமிழில் பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு மற்றும் நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளனர்.

இந்த படத்தில் கார்த்திக் நடிக்கும் கதாபாத்திரத்தைப் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி கார்த்திக் படத்தில் ஒரு காலத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக இருந்து இப்போது மார்க்கெட் இல்லாததால் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராக நடிக்கிறாராம். கதைப்படி அவரின் இரண்டாவது மனைவியான சிம்ரன் கள்ளக்காதலனோடு சேர்ந்து அவரைக் கொலை செய்துவிடுவதைதான் பிரசாந்த் பார்த்துவிட்டு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்பதே கதையாம்.

இந்த படத்தின் படத்தை இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக் இயக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆணவம் வேண்டாம் அர்ச்சனா... நாளைக்கே வெளியே வந்திடுவீங்க...!