Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.. கார்த்தியுடன் இணையும் இயக்குனர்..!

Siva
வியாழன், 13 மார்ச் 2025 (19:14 IST)
நடிகர் கார்த்தி சமீபத்தில் "வா வாத்தியாரே" படத்தில் தனது பகுதியை முடித்திருக்கிறார். தற்போது "சர்தார் 2" படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
 
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முழுக்க முழுக்க ஒரு காதல் கதையில் நடிக்கவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. "வா வாத்தியாரே", "சர்தார் 2" ஆகிய படங்களை முடித்ததும், "கைதி 2", மற்றும் "டாணாக்காரன்" இயக்குநர் தமிழ் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார்.
 
மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் அவர் இணைவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபல இயக்குநர் கௌதம் மேனன், கார்த்தியை சந்தித்து ஒரு கதையை நன்கு விவரித்ததாகவும், அந்தக் கதை அவருக்கு பிடித்ததால் இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றும் தகவல் வந்துள்ளது. இந்தப் படத்தின் திரைக்கதை, வசனங்களை ஜெயமோகன் எழுதுகிறார் என்று கூறப்படுகிறது.  
 
கார்த்தி, இதற்கு முன்பு "காற்று வெளியிடை" என்ற ஒரு முழுநீள காதல் கதையில் நடித்த நிலையில், மீண்டும் காதல் கதையில் நடிக்க இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

சௌந்தர்யா விபத்தில் சாகலை.. இந்த நடிகர்தான் கொலை செய்தாரா?? - 20 ஆண்டுகள் கழித்து அதிர்ச்சி புகார்!

க்யூட் லுக்கில் கலக்கும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த கண்ண பாத்தாக்கா… கூல் லுக்கில் வாணி போஜன்!

அடுத்த கட்டுரையில்
Show comments