Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கனா ரனாவத் சகோதரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்! இதுதான் காரணம்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:31 IST)
நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சாண்டனின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் எந்த விதமான சமூகவலைதளங்களிலும் இல்லை. அவரது கருத்துகளை தனது சகோதரி ரங்கோலி சாண்டனின் டிவிட்டர் கணக்கு மூலமாக தெரிவித்து வந்தார். கடந்த வாரம் இந்தியாவில் தேர்தலை ரத்து செய்துவிட்டு மோடியையே மீண்டும் பிரதமராக அறிவிக்க வேண்டும் எனற சர்ச்சையான டிவீட்டைப் பகிர்ந்திருந்தார்.

மேலும் ஒரு குறிப்பிட்ட  சமுதாயத்தைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாகவும் ஒரு டிவிட்டைப் பகிர்ந்தார். இந்நிலையில் அவரது டிவீட்டுக்குப் பலரும் புகாரளிக்க அந்த டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்நிலையில் தனது கணக்கு முடக்கப்பட்டது குறித்து பேசியுள்ள ரங்கோலி டிவிட்டர் இந்தியாவுக்கு எதிரானது எனக் கூறியுள்ளார்.

அவரது பேச்சில் ‘டிவிட்டரில் இந்துக் கடவுள்களை, இந்திய அரசியல் தலைவர்களைக் கிண்டல் செய்யலாம். காவல்துறை மீது கல்லடிப்பவர்களைப் பற்றி ஏதாவது சொன்னால் உங்கள் கணக்கை ரத்து செய்துவிடுவார்கள். அதனால் எனது கணக்கை நான் மீட்கப்போவதில்லை. நான் எனது சகோதரியின் செய்தித் தொடர்பாளராக இருந்தேன். இனி அவரது நேரடிப் பேட்டிகளைப் பாருங்கள். அவரைப் போன்ற நட்சத்திரம் ஒருவரின் செய்தி உங்களை சென்றடைய பல வழிகள் உள்ளன’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments