கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து, உலகம் முழுவதும் ரிலீஸ் செய்த கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவருடைய அடுத்த படமான அன்பறிவ் இயக்கும் படத்தை அவர் கைவிட்டுவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால், இது உண்மை இல்லை என்றும், தக்லைஃப் படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் சரிசெய்யும் பணிகள் தொடங்கிவிட்டன என்றும், அதற்கும் 'அன்பறிவு' படம் தொடங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், திட்டமிட்டபடி அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றும், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கமல்ஹாசன் தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகிறது.
மேலும் கமல்ஹாசன் தற்போது ராஜ்யசபா எம்பியாக பதவியேற்க இருப்பதால், பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், அதன் தேதிகளை பொறுத்துதான் கமல்ஹாசன் 234 படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
எனவே, அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் உறுதியாக தொடங்கப்படும் என்றும், அந்த படம் கைவிடப்பட்டது என்று, அவ்வாறு கைவிடப்படுவதாக் கூறப்படும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கமல் தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.