Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு… ஷூட்டிங் செல்ல மறுக்கும் கமல் ! லைகா அதிர்ச்சி !

தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு… ஷூட்டிங் செல்ல மறுக்கும் கமல் ! லைகா அதிர்ச்சி !
, புதன், 26 பிப்ரவரி 2020 (08:17 IST)
லைகா நிறுவனத்துக்கு கமல் எழுதியுள்ள கடிதத்தால் அந்நிறுவனம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமலும், தயாரிப்பு நிறுவனமான லைகாவும் இழப்பீடு அளித்துள்ளனர். ஆனாலும் இந்த விபத்தால் தன் அரசியல் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வது என முடிவு செய்துள்ளாராம்.

இதற்காக அவர் லைகா நிறுவனத்துக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் லண்டனில் தற்போது நடக்க இருந்த படப்பிடிப்பு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லைகா நிறுவனம் அதிர்ச்சியிள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தை சமாதானப்படுத்த ரஜினி முடிவா? ஒரு ஆச்சரிய தகவல்