Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் சங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு: திரையுலகில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (10:18 IST)
கமல்ஹாசன் சங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு
கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த படப்பிடிப்பில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக 3 பேர் பரிதாபமாக பலியாகினர் 
 
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதை காரணமாகத்தான் இந்த விபத்து நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை செய்ய கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் தரப்பில் முடிவு செய்திருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியன் 2’விபத்து குறித்து கமல் மற்றும் ஷங்கரிடம் விசாரணை செய்ய சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்து இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… செம்ம சர்ப்ரைஸ் காத்திருக்கு!

‘கமல் சார் 58 நிமிடம் பேசுவார்.. நான் 2 நிமிடம் பேசுவேன்’ – நக்கல்யா மணிரத்னத்துக்கு!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?,.. பணிகளை முடுக்கிவிடும் படக்குழு!

மணிரத்னம், கமல்ஹாசன் 2 பேருமே சீனியர்கள்.. இளைய தலைமுறை ரசிகர்களை ஈர்க்குமா ‘தக்லைஃப்’?

தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது… தக் லைஃப் ப்ரமோஷனில் கமல் பேச்சு – கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments