Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முத்துக்குமார் செக் பவுன்ஸ்: பணத்தை நான் வாங்கித் தருகிறேன் கலைப்புலி எஸ்.தாணு

முத்துக்குமார் செக் பவுன்ஸ்: பணத்தை நான் வாங்கித் தருகிறேன் கலைப்புலி எஸ்.தாணு

Advertiesment
முத்துக்குமார்
, வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (12:21 IST)
நா. முத்துக்குமாருக்கு தயாரிப்பாளர்கள் அளித்த காசோலைகள் பவுன்ஸாகி வந்த பட்டியலை அவரது குடும்பத்தார் அளித்தால் பணத்தை தான் வாங்கித் தருவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.


 


முத்துக்குமாரின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் பாடல் எழுதியதற்கு தயாரிப்பாளர்கள் பலர் காசோலைகளை அளித்ததாகவும் அந்த காசோலைகளில் பல வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் பவுன்ஸாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முத்துக்குமாருக்கு அளிக்கப்பட்டு பவுன்ஸாகி வந்த காசோலைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடந்த கூட்டத்தில், முத்துக்குமாருக்கு எந்தெந்த தயாரிப்பாளர்கள் அளித்த காசோலைகள் பவுன்ஸாகி வந்தன என்ற பட்டியலை அவரது குடும்பத்தார் அளித்தால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தான் வாங்கித் தருவதாக தாணு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் வெடிக்கும் பிரச்சனை