Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்காத காடன்!

ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்காத காடன்!
, சனி, 27 மார்ச் 2021 (10:29 IST)
காடன் படம் ரிலிஸாகி உள்ள நிலையில் அந்த படத்துக்காக எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழ் திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் முதன்முறையாக ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இயக்கும் திரைப்படம் காடன். தமிழில் காடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் “ஹாத்தி மெரெ சாத்தி” தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயர்களில் வெளியாகிறது. மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 அன்று வெளியானது.

இந்நிலையில் மிகப்பெரிய செலவில் உருவாகி வெளியான இந்த படத்துக்கு எதிர்பார்த்த அளவிலான கூட்டம் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடியும் முன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி!