Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தொடங்கிய கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 ஷூட்டிங்!

மீண்டும் தொடங்கிய கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 ஷூட்டிங்!
, செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (09:17 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஆனால் முந்தைய படத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் 36 நாட்களில் பெரும்பகுதி ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஊட்டிக்கு அருகே கிராமத்தில் சுமார் 100 குதிரைகள் மற்றும் 1000 ஜூனியர் நடிகர்களுடன் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடத்தினார். இந்நிலையில் மீதமுள்ள சில காட்சிகளை இப்போது பழனிக்கு அருகே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்‌ஷய் குமாரின் அடுத்தடுத்த ப்ளாப்… கிடப்பில் போடப்பட்ட ஏ ஆர் முருகதாஸின் கனவுப் படம்!