Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெந்து தணிந்தது கிராமத்துக் கதை இல்லை… எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்த தகவல்!

வெந்து தணிந்தது கிராமத்துக் கதை இல்லை… எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்த தகவல்!
, திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:16 IST)
வெந்து தணிந்தது காடு படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் எழுதியுள்ளார்.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

இதுபற்றி ஜெயமோகன் இப்போது தன்னுடைய இணையதளத்தில் ‘கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ முதலில் நதிகளில் நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டிருந்த படம்தான். அந்தக்கதை மென்மையான நகர்ப்புறக் காதல்கதை. அதுவும் பின்னர் படமாகவே வாய்ப்பு. சிலம்பரசன் இப்போது உடல்மெலிந்து, மென்மீசையுடன் மிக இளைஞராக, கிட்டத்தட்ட சிறுவன் போல இருக்கிறார். அவருக்கு பொருந்தும் கதை என்பதனால் இந்தக்கதை தெரிவுசெய்யப்பட்டது. அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா. வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்ல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடியில் ஹிட் அடித்த மிமி… தமிழ் ரீமேக்கில் நயன்தாரா?