Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி!

பல வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி!
, வெள்ளி, 4 மார்ச் 2022 (16:21 IST)
ஜெயம் ரவி பூலோகம் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிக்கும் அகிலன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி இப்போது ஈழத் தமிழராக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இயக்குனர் கல்யாண் படமாக்கி முடித்துவிட்டார். படம் 1980 மற்றும் நிகழ்காலம்இரண்டு கால கட்டங்களில் நடக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அகிலன் படத்தில் இரட்டை வேடம் ஏற்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியிடம் அவகாசம் கேட்ட நெல்சன்… தலைவர் 169 ஷூட் எப்போது?