Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம்ரவியின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்… அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

ஜெயம்ரவியின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்… அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

vinoth

, சனி, 5 அக்டோபர் 2024 (11:47 IST)
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் ரிலிஸுக்குக் காத்திருக்கின்றன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. ஜெயம் ரவி தன்னுடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர் ஏற்கனவே முன்பணம் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு இன்னும் படம் நடித்துக் கொடுக்கவில்ல்லை என்ற குற்றச்சாட்டுகள் அவர் மேல் வைக்கப்பட்டன.

இதற்கிடையில் ரவி சென்னையில்  இருந்து வெளியேறி நிரந்தரமாக மும்பையில் செட்டில் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல அவர் சமீபகாலமாக மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியின் 34 ஆவது பட அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் ஆகிறார் வனிதா.. தயாரிப்பாளர் ஆகிறார் ஜோவிதா.. அதிரடி அறிவிப்பு..!