Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவியின் பூமி கதையும் சுட்டதுதானா? பாக்யராஜுக்காக காத்திருக்கும் பஞ்சாயத்து!

ஜெயம் ரவியின் பூமி கதையும் சுட்டதுதானா? பாக்யராஜுக்காக காத்திருக்கும் பஞ்சாயத்து!
, சனி, 5 செப்டம்பர் 2020 (17:59 IST)
இயக்குனர் லஷ்மண் இயக்கியுள்ள பூமி படத்தின் கதை தன்னுடையது என்று ஒரு உதவி இயக்குனர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்ட நிலையில் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள், அதனை அடுத்து டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் உதவி இயக்குனர் ஒருவர் இந்த படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தனது முழுக்கதையும் கதாசிரியர்கள் சங்கத்தில் 2017 ஆம் ஆண்டே பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். கதாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் தனது மாமியார் மறைவு காரணமாக சில நாட்கள் அலுவலகத்துக்கு வராததால் அவருக்காக இந்த பஞ்சாயத்து இப்போது காத்திருக்கிறதாம். இதற்கு இடையில் புகார் கொடுத்த உதவி இயக்குனரைக் காப்பாற்றும் வேலைகளும் நடந்து வருகிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்! ஏன் இந்த முடிவு!