Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘அம்மாவுக்குக் கொடுத்த அன்பை எனக்கும் கொடுங்கள்’… தேவரா மேடையில் ஜான்வி நெகிழ்ச்சி

‘அம்மாவுக்குக் கொடுத்த அன்பை எனக்கும் கொடுங்கள்’… தேவரா மேடையில் ஜான்வி நெகிழ்ச்சி

vinoth

, புதன், 18 செப்டம்பர் 2024 (07:30 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் இந்தி சினிமாக்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக அறியப்படுகிறார்.

பாலிவுட் படங்களில் மட்டும் இதுவரை நடித்து வந்த அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் தேவரா படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலிஸாகிறது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடக்க அதில் கலந்துகொண்டுள்ளார் ஜான்வி.

அப்போது பேசிய அவர் “சென்னை எனக்கு மிகவும் தனித்துவமான ஊர். ஏனென்றால் என் அம்மாவுடன் இருந்த சில அற்புதமான தருணங்கள் எனக்கு இந்த ஊரில்தான் வாய்த்தது. நீங்கள் என் அம்மா மீது காட்டிய அன்புதான் எங்களின் இப்போதைய நிலைக்குக் காரணம்.  அதற்கு நான் எப்போதும் கடமைப் பட்டிருக்கிறேன். அதே அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த படம் பேன் இந்தியா லெவலில் ரீச்சாகும்… இயக்குனர் மோகன் ஜி நம்பிக்கை!