Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்ட படத்துக்கு நடந்திருப்பது அநியாயம்! ஶ்ரீரெட்டி கொதிப்பு

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (19:52 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார் உள்பட பலர் நடித்துள்ள பேட்ட படம் நாளை வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். பேட்ட படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு என்டிஆர் வாழ்க்கை வரலாறு படம் மற்றும்  ராம் சரண் தேஜாவின் வினய விதேய ராமா ஆகிய படங்கள் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதால் பேட்ட படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. குறைந்த திரையரங்குகளில் பேட்ட நாளை வெளியாகிறது. 
 
இந்நிலையில் பேட்ட படத்தை வெளியிடவிடாமல் சிலர் தடுத்து உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார் நடிகை ஶ்ரீரெட்டி. 
 
இது தொடர்பாக  அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், பேட்ட படத்தை வெளியிடாமல் தடுக்கும் டோலிவுட் மாபியாக்களான சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த்,  சுனில் நரங்க் , தில் ராஜு ஆகியோரை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. அவர்கள் பல சிறிய பட தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுயநலமாக செயல்படுவதால், ஆந்திராவில் பேட்டை படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அசோக் குருவில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கோபமாக ஶ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments