Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாக்டவுனில் ரசிகர்களை தன்வசப்படுத்த புதிய வித்தை கையாளும் நடிகை!

லாக்டவுனில் ரசிகர்களை தன்வசப்படுத்த புதிய வித்தை கையாளும் நடிகை!
, சனி, 27 ஜூன் 2020 (10:22 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஆனால், இந்த கொரோனா ஊரடங்கில் போட்டோ ஷூட் எடுக்க முடியாததால் ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொள்ள நடிகைகள் பெரும்பாலானோர் பழைய புகைப்படங்கள்... மற்றும் கழித்துக்கட்டிய போட்டோ உள்ளிட்டவரை இந்த சமயத்தில் வெளியிட்டு அதற்கு வித்யாசமான கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை பின்தொடர வைத்து வருகின்றனர். தற்ப்போது இந்த வித்தையை கையில் எடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன் throwback போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை ரசனையில் ஆழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தமிட்டா கொரோனாவா? சமந்தா முத்தத்தால் மரண பீதி!!