Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கு காரணம் இந்த பாடகியா? - உண்மையை சொன்ன வக்கீல்!

Prasanth Karthick
வியாழன், 21 நவம்பர் 2024 (10:58 IST)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்து அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து அவரது வக்கீல் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு கதீஹா, ரஜீமா என்று இரண்டும் மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். 

 

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுடனான திருமண வாழ்க்கையிலிருந்து விடைப்பெறுவதாக சாய்ரா பானு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த முடிவு தொடர்பாக வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இது நடந்த அடுத்த நாளே, ஏ ஆர் ரஹ்மானிடம் பல ஆண்டுகளாக துணை பாடகியாக பணியாற்றி வரும் மோஹினி ரே தனது கணவரை பிரிவதாக அறிவித்தார்.
 

ALSO READ: ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ வசனம் முதலில் இல்லை .. கடைசி நேரத்தில் விஜய் சார்தான் மாற்றினார் –சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
 

இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் சினி உலகில் பரபரப்பை ஏற்படுத்திய அதேசமயம், ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்திற்கு மோஹினி ரே தான் காரணம் என சமூக வலைதளங்களில் பேச்சும் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவருக்குமான வழக்கறிஞரான அவர், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்றும், இருவரும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இது ஒரு இணக்கமான விவாகரத்து என்றும் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்