Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யை கலாய்க்கின்றாரா கருணாகரன்?

விஜய்யை கலாய்க்கின்றாரா கருணாகரன்?
, செவ்வாய், 20 மார்ச் 2018 (22:00 IST)
ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு மட்டும் நேற்று சென்னை விக்டோரியா மஹாலில் நடந்தது. இந்த படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதிலும், ஒருசில தயாரிப்பாளர்கள் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்

இந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன், 'தமிழன்னு சொன்னா திமிர் ஏறும்' என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா? என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மெர்சல் படத்தின் அந்த பாடலில் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய், நிஜத்தில் ஒற்றுமைக்கு ஒத்துழைக்காமல் படப்பிடிப்பு நடத்துவதாக அர்த்தம் தொணிக்கும் வகையில் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கருணாகரனின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் கருணாகரனை அர்ச்சனை செய்து வருகின்றனர். கருணாகரன் உண்மையில் விஜய் கலாய்ப்பதற்காக இந்த டுவீட்டை போட்டாரா? அல்லது வேற அர்த்தமா? இதற்கு அவரே விளக்கம் அளித்தால்தான் இந்த பிரச்சனை தீரும்'

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் திடீர் சந்திப்பு...