ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

Siva
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (18:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தின விருந்தாக வெளியாகவுள்ள நிலையில், படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தத் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தில், ரஜினிகாந்துடன் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
நாளை சென்னையில் இந்த படத்தின் விளம்பர நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் அதிக அளவிலான வன்முறை மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதால், 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படங்கள் அனைத்துக்கும் 'யு/ஏ' சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், 'கூலி'தான் அவரது முதல் 'ஏ' சான்றிதழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
'கூலி' திரைப்படம், வெளியாகும் நாளிலிருந்து ரசிகர்களுக்கு ஒரு புதிய திரையரங்க அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments