Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் பாலா – சூர்யா இடையே மோதலா?... 2D நிறுவனம் அளித்த விளக்கம்!

இயக்குனர் பாலா – சூர்யா இடையே மோதலா?... 2D நிறுவனம் அளித்த  விளக்கம்!
, வியாழன், 5 மே 2022 (09:35 IST)
இயக்குனர் பாலா மற்றும் சூர்யாவுக்கு இடையே படப்பிடிப்புத் தளத்தில் மோதல் எழுந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இப்போது பட தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில் “படப்பிடிப்பு நன்றாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக நடந்த 34 நாட்கள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான செட் வேலை நடந்து வருகிறது.” என விளக்கம் அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லி ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்டைக் கொடுத்த யோகி பாபு!