Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"இருட்டு அறையில் முரட்டு குத்து 2" படத்தின் தரமான அப்டேட் !

, வியாழன், 30 ஜனவரி 2020 (18:21 IST)
சந்தோஷ் இயக்கத்தில் காமத்தை விரும்பும் பேய் எனும் காமெடி கதைக்களத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இப்படத்தில் கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.
 
அதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சந்தோஷ் இயக்கி அவரே ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஹீரோயின்களாக கரிஷ்மா மற்றும் அக்ரித்தி சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் அப்டேட் குறித்த தகவல்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சமீபத்திய தகவல் ஒன்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளது 
 
அதாவது,  விறு விறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து  கூடிய விரைவில் இப்படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன்’ அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையிலா? புதிய தகவல்!