Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன்’ அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையிலா? புதிய தகவல்!

பொன்னியின் செல்வன்’ அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையிலா? புதிய தகவல்!
, வியாழன், 30 ஜனவரி 2020 (18:03 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம்ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது
 
இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஒரு மாதத்துக்கும் மேல் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக இலங்கையிலுள்ள லொகேஷன் பார்க்கப்பட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்களின் கால்ஷீட்டில் ஒரு சிறு பிரச்சனை இருப்பதால் இந்த படப்பிடிப்பில் சற்று காலதாமதமாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இடையில் இருக்கும் இந்த நாட்களில் சென்னை மற்றும் புதுச்சேரியில் குறைந்த கால படப்பிடிப்பு நடத்த மணிரத்னம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தாய்லாந்தில் எடுக்கப்பட்ட படப்பிடிப்புகளில் தொடர்ச்சியாக ஒரு சில காட்சிகள் சென்னையிலும் புதுவையிலும் மணிரத்னம் படமாக்க இருப்பதாகவும் அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"வானம் கொட்டட்டும்" படத்தின் "ஈசி கம் ஈசி கோ" வீடியோ பாடல் இதோ!