Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்சன் கிங் அர்ஜூனின் ஏடிஎம் மோசடி மற்றும் போர்ஜரி: விஷால் அதிர்ச்சி

ஆக்சன் கிங் அர்ஜூனின் ஏடிஎம் மோசடி மற்றும் போர்ஜரி: விஷால் அதிர்ச்சி
, செவ்வாய், 27 ஜூன் 2017 (22:47 IST)
விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் 'இரும்புத்திரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



 


மேலும் இந்த படம் டிஜிட்டல் க்ரைம் குறித்த கதை என்றும், குறிப்பாக வில்லன் அர்ஜூன் ஏடிஎம் மிஷின்களில் பணத்தை கொள்ளையடிப்பது மற்றும் போர்ஜரி வேலைகள் செய்வதை விஷால் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதான் கதை என்றும் கூறப்படுகிறாது.

சமூகத்தில் அந்தஸ்து உள்ள ஒரு மனிதராக விளங்கும் அர்ஜூன் தான் இந்த குற்றங்களை செய்தவர் என்பதை கண்டுபிடிக்கும் அர்ஜூன் அதிர்ச்சி அடைவதாகவும், அர்ஜூனின் குற்றங்களை ஆதாரத்துடன் நிரூபிக்க விஷால் செய்யும் தந்திரங்கள் இந்த படத்தின் திரைக்கதையின் சிறப்பு என்றும் கூறப்படுகிறது. விஷாலுக்கு முதன்முதலில் சமந்தா இந்த படத்தில் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்பத்தான் பூஜையே போட்டிருக்கு! அதுக்குள்ள வியாபாரம் முடிஞ்சது: அதுதான் சிவகார்த்திகேயன்