Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 இனி நடக்க வாய்ப்பே இல்லையா? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (17:50 IST)
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது லைகா மற்றும் இயக்குனர் ஷங்கருக்கு இடையே கருத்து மோதல் எழுந்தது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது என்பதும் அவருடைய அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் இந்தியன் 2 திரைப்படம் முடியும் வரை மற்ற படங்களை ஷங்கர் இயக்கத் தடை கேட்டு லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யபபட்டன. இதை எதிர்த்து இப்போது ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் வழக்கு தொடர உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஷங்கர் மனதளவில் அழுத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில் இப்போது ஷங்கரை இந்தியா வந்திருந்த லைகா அதிபர் சுபாஷ்கரன் சந்தித்து பேசியதாகவும், அதையடுத்து எல்லா பிரச்சனைகளையும் சுமூகமாக தீர்த்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து முதல் கட்டமாக ஷங்கர் மேல் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது. இந்தியன் 2 படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் மறுபடியும் ஷங்கருக்கும் லைகாவுக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் மீதமுள்ள படத்தை எத்தனை நாட்களில் எவ்வளவு செலவில் எடுத்துக் கொடுப்பீர்கள் என்று எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை லைகா ஷங்கரை வைத்ததாகவும், ஆனால் ஷங்கர் அதற்கு மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து மறுபடியும் இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை பழைய நிலைக்கே சென்றுவிட்டதாம். இதனால் ஷங்கர் இனிமேல் எக்காரணம் கொண்டும் லைகா நிறுவனத்தோடு இணைந்து பணியாற்ற முடியாது என்ற முடிவை எடுத்துவிட்டாராம். லைகா நிறுவனமும் ஷங்கரிடம் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையில் உள்ளதாம். இதனால் இந்தியன் 2 படம் இனிமேல் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழல்தான் உள்ளது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments